Tuesday, August 10, 2010

உன்னை கொடு என்னை தருவேன் | இதயத்தை காணவில்லை

Posted by Anonymous on 7:28 PM 0 comments



வானில் இருந்து வானவில் ஒன்று மண்ணில் இரங்கி வந்ததோ
மங்கை அவளது மந்திர கண்கள் சந்திர சூரியன் ஆனதோ
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
அவள் பாதகொலுசொலி கேட்கும் போது

இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை

சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு
வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே

இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
பௌர்ணமி நிலவை மிக அருகினில் பார்த்தேன்
பரவச கடலில் நான் படகாய் ஆனேன்
தேவதை கண்ணில் இரு தூண்டிலை பார்த்தேன்
மாட்டிய மீனாய் நானே நான் ஆனேன்
பல்லவன் உளிகள் கூடி செதுக்கிய சிலை தானா
பிரம்மன் சிலையை பார்த்து ஜீவனை கொடுத்தானா
தீண்டாமல் திருடசொன்னானா என்னை இன்று
இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
ஒரு மைல் தூரம் இது காதல் கடிதம்
அவளுக்கு எழுதி நான் அஞ்சல் செய்தேன்
இனி அவள் முத்தம் அது சேமித்து வைக்க
என்னுடல் முழுதும் நான் உதடுகள் கேட்டேன்
சொர்க்கத்தில் என்னை பூட்டி சாவியை தொலைதாளே
பூக்களின் தொட்டிலில் போட்டு அவள் லாலிகள் படித்தாளே
பாறை மீது பூவை பூத்தளே என்னில் இன்று
இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை

சிட்டுகுருவியின் சிறகு வாங்கி அட பறக்கணும் போல இருக்கு
வெட்டுகிளியின் கால்கள் வாங்கி அட குதிக்கணும் போல இருக்கு
கோடி ஜென்மம் வாழ்ந்தேன் இன்னாளே இது உண்மை தானே

இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails