Wednesday, August 11, 2010

கோரிப்பாளையம் | என்ன இந்த மாற்றமோ என் மன்சு வலிக்குதே

Posted by Anonymous on 8:29 PM 0 comments



என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணிரண்டும் காந்தமோ
என்னக் கட்டி இழுக்குதே

உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே

நீ வந்ததும் என்னானதோ
என் வாழ்க்கையே வேறானதோ

என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணிரண்டும் காந்தமோ
என்னக் கட்டி இழுக்குதே

உன் புன் சிரிப்பில்
என் உலகத்தையே பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே

நீ வந்ததும் என்னானாதோ
என் வாழ்க்கையே வேறானதோ

சின்னச் சின்ன புன்னகையில் என்னைப் பறித்தாய்
வண்ண வண்ணக் கனவுகள் கண்ணில் கொடுத்தாய்
சிறிய இதயத்தில் பெரிய காதலை… தந்தாயடி என் அன்பே

மெல்ல மெல்ல மனசுக்குள் இடம் பிடித்தாய்
மின்மினிக்கும் மின்னலைப் போல் ஒளி கொடுத்தாய்
உறங்கும் நேரத்தில் நினைவின் ஓரத்தில் வந்தாயடா என் அன்பே

ஒரு பார்வை பார்க்கும் போதிலே
எந்தன் பாதம் வானம் ஏறுதே
மறு பாதி பார்க்கும் போதிலே
எந்தன் ஜென்ம சாபம் தீருதே

என் கால் கொலுசு … உன் பெயரை சொல்ல … நான் கேட்டேனே

நீ வந்ததும் என்னானதோ என் வாழ்க்கையே வேறானதோ

என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணிரண்டும் காந்தமோ
என்னக் கட்டி இழுக்குதே…

சுற்றி உந்தன் முகம் அன்றி ஏதும் இல்லையே
மற்றவழி வேறு ஒன்றும் தொல்லை இல்லையே
உயிரை எடுக்கிறாய் திரும்பக் கொடுக்கிறாய்
திண்டாடுதே என் நெஞ்சம்…

நெற்றிப் பொட்டில் நேற்றுவரை காச்சலில்லையே
நட்சத்திரம் பார்த்து நானும் பேசவில்லையே
உயிரில் குதிக்கிறாய் நீச்சல் அடிக்கிறாய்
கொண்டாடுதே என் நெஞ்சம்…

உனை பார்த்து கொஞ்சம் பேசத்தான் எந்தன் ஆசை தாவி ஓடுதே
உனை பார்த்து பேசும் நேரத்தில் எந்தன் பார்வை ஊமை ஆகுதே

கண் பார்வை ரெண்டும் சொல்லாததையா உன் இதழ்கள் சொல்லும்

நீ வந்ததும் என்னானதோ … என் வாழ்க்கையே வேறானதோ…

என்ன இந்த மாற்றமோ
என் மனசு வழுக்குதே
கண்ணிரண்டும் காந்தமோ
என்னக் கட்டி இழுக்குதே…

உன் பூ முகத்தில்
என் தாய் முகத்தை
நான் பார்த்தேனே
உன் ஞாபகத்தை
என் ஆயுள் வரை
நான் சேர்ப்பேனே

நீ வந்ததும் என்னானாதோ
என் வாழ்க்கையே வேறானதோ


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails