Tuesday, August 10, 2010

நாடோடிகள் | உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது

Posted by Anonymous on 8:25 PM 0 comments



உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சயதார்த்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துக்காக காதலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம்.. ஆ ஆ ஆ ஆ
யார் பாவம் யாரைச்சேரும் யார்தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கன்னிமானே
சுற்றம் செய்த குற்றம்தானே

உயிரில் பூக்கும் காதல் உணர்வின் வாழ் நிலை
உணர்வை பார்ப்பதேது உறவின் சூழ் நிலை

மனமென்னும் குளத்தில் விழி என்னும் கல்லை
முதல் முதல் எறிந்தாளே
அலையலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால் கரை வரக்கூடும்
விதி வழிப் போனானே
விதை ஒன்று போட வேரொன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது.... என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோர்க்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதலாகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வலியது


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails