Wednesday, August 18, 2010

காலமெல்லாம் காதல் வாழ்க | ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்

Posted by Anonymous on 8:41 PM 0 comments




ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிஃபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் சுவரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவது ஏனடியோ

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிஃபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
வாசம் மட்டும் வீசும் பூவே வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன் நான் தேடுகிறேன்
தேடி உன்னை பார்த்து பார்த்து கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன் நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றைச் சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஓ…ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிஃபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
உந்தன் முகம் பார்த்த பின்னே கண்ணிழந்து போவதென்றால்
கண் இரண்டும் நானிழப்பேன் இப்போதே நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனித் தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும்போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே

ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிஃபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails