Tuesday, August 10, 2010

காதல்னா சும்மா இல்ல | என்னமோ செய்தாய் நீ என்னதான் செய்தாய் நீ

Posted by Anonymous on 7:15 PM 0 comments



என்னமோ செய்தாய் நீ
என்னதான் செய்தாய் நீ
என்னமோ செய்தாய் நீ 
என்னதான் செய்தாய் நீ

எதிரில் யாரை பார்க்கும் போதும்

கண்கள் உன்னை தானே தேடும்

கால்கள் தரையில் இறங்கும் போதும்

மனசு பறந்து பார்க்க தோன்றும்

என்னமோ செய்தாய் நீ

என்னதான் செய்தாய் நீ

குடைகள் கையில் இருக்கும் போதும்

மழையில் நனைந்து பார்க்க தோன்றும்

கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்

கொஞ்சம் விலகி பார்க்க தோன்றும்


உன்னை பார்க்கும் முன்னே உலகம் சிரியதடி

உன்னை பார்த்த பின்னே உலகம் பெரியதடி

ஜன்னல் திறந்து பார்க்க வைத்தாய்

என்னை உணர்ந்து பார்க்க வைத்தாய்

ஓ ...நீ பார்க்கும் பார்வை ஒரு நாள்

நான் பார்க்கும் பார்வை ஆகும்

எப்படி எப்படி எப்பாடி எனக்குள் வந்தாய்

எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்

எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும்

பதில்கள் இல்லையே

நதியில் மிதக்கும் இலைக்கு எல்லாம்

நதியின் ஆழம் தெரிவதில்லை

காதல் எந்த நிமிடம் பிறக்கும்

கடவுள் உலகம் அறிவதில்லை


என்னமோ செய்தாய் நீ

என்னதான் செய்தாய் நீ



குழந்தை சிரிப்பினிலே உள்ளம் திருடுகிறாய்

மெதுவாய் மயிலிறகாய் மனதை வருடுகிறாய்

காலம் உறைந்து போக வைத்தாய்

கனவில் கரைந்து போக வைத்தாய்

உன் கோலம் முழுதும் பூ பூத்து பூ கோலம் ஆனது உன்னாலே

எப்படி எப்படி எப்படி எனக்குள் வந்தாய் எந்தன் நெஞ்சை கேட்டு பார்த்தேன்

எத்தனை எத்தனை எத்தனை எத்தனை தடவை கேட்டும் பதில்கள் இல்லையே

கண்கள் கடிதம் போட்ட பின்னே கிளிகள் பறந்து வருதில்லை

கண்கள் திறந்து பார்த்த பின்னே ஓ ..இதயம் முரண்டு பிடிப்பதில்லை

என்னமோ செய்தாய் நீ

என்னதான் செய்தாய் நீ

கொஞ்சம் நெருங்கி பார்க்க தோன்றும்

கொஞ்சம் விலகி பார்க்க தோன்றும்

கால்கள் தரையில் இருக்கும் போதும்

மனசு பறந்து பார்க்க தோன்றும்


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails