Monday, September 28, 2009

ஈரம் | தரை இறங்கிய பறவை போலவே

Posted by Anonymous on 5:22 PM 0 comments



தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக் குறைந்து போகிறேன்
அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன்
நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

நதியில் மிதக்கு ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உனர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளையின் மைப்பூசுவாய்
விலக நினைத்தால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
கிடந்துத் தவித்தேன்..

எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது
எது எது எனை முழுதும் சாய்ந்தது
நெறுப்பும் பனியும் நெருங்குகிறது
நிருதிரு வென விழித்துப்பார்க்கிறேன்
திசை அனைத்திலும் உன்னை காண்க்றேன்
நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன்
எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன்
நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்

அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை
அம்மையா அம்மையா நீயில்லாமல் நான் இல்லை

அருகில் இருந்தால் உன் வாசனை
தொலவில் இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
இதமாய் உள்ள என் காதலே
முழுதாய் மாறுது என் வானிலை
இருவரில் யாரும் யாரோ இல்லை
கனவும் நினைவும் இணைந்து வருதே
வருதே வருதே..


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails