Monday, July 18, 2011

தளபதி | சுந்தரி கண்ணால் ஒரு சேதி (பாடல்)

Posted by சிவாஜி on 4:59 PM 0 comments




சுந்தரி கண்ணால் ஒரு சேதி!
சொல்லடி எந்நாள் நல்ல தேதி?
என்னையே தந்தேன் உனக்காக!
ஜென்மமே கொண்டேன் அதற்காக!
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!


1. வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா?
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா?
வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை?
வான் நிலவை நீ கேளு! கூறும் என் வேதனை!
எனைத்தான் அன்பே மறந்தாயோ?
மறப்பேன் என்றே நினைத்தாயோ? – என்னையே தந்தேன்


2. சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நானுன் மார்பில் தூங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ? நீ எனை தீண்டினால்
காயங்களும் மாறாதோ? நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்!
வருவேன் அந்நாள் வரக்கூடும் – சுந்தரி கண்ணால்


Widget By Devils Workshop
 
Related Posts with Thumbnails